ஒரு பிற்பகல் மரணம்




சந்தியா பதிப்பகத்தின் புதிய வெளியீடாக வெளிவந்துள்ள வாமுகோமுவின்
இந்த சிறுகதைத்தொகுப்பில் மொத்தம் 18 கதை நிகழ்வுகள் உள்ளன. கதை மாந்தர்கள் வாழும் பகுதி அல்லது அவரது படைப்புகளின் இயங்கு தளம் என்று சொன்னால் விஜயமங்கலம் ,வாய்ப்பாடி,சென்னிமலை,திருப்பூர் இப்பகுதிகள்தான்.









இந்த பகுதியில் வாழும் மனிதர்களின் கதைகள்தான் வாமுகோமுவின் படைப்புக்கான ஆதாரங்கள்.
























முன்னுரையை மட்டும் கொடுத்துள்ளோம்



















---

Posted by வாய்ப்பாடி குமார் on 11/20/2009 04:28:00 PM 8 கருத்துரைகள்

வாமுகோமு டைரி 91ல் கிடைத்த கவிதைகள்

1. நல்லவர்கள் நாலுபேர் ஊரில் பிணமாய் எரிவதால் தான் மழை இன்னும்
பொய்த்துக்கொண்டே போகிறதோ ?

2. இன்னமும் பாஞ்சாலிகள் இருக்கிறார்கள் அப்புனு ! சீலைகளை அவிழ்த்துப்
போட ! போட!

3. சரித்திரம் தனிமனிதனோடு முடிவதில்லை அப்புனு ! ஒரு அண்ணா டாட்டா
காட்டினால் ஒரு எம்.ஜி.ஆர் ,ஒரு எம்,ஜி.ஆர் போனால் ஒரு ஜெ !ஒரு
ஜி. நாகராஜன் போனால் ஒரு தஞ்சை பிரகாஷ் ! ஒரு தஞ்சை பிரகாஷ்
போனால் ஒரு வா.மு.மாமூ !


4. கும்பிட்டுப் பார்ப்போம், சூடம் , ஊதுபத்தி காட்டியும் பார்ப்போம்,அட ஒரு
வெள்ளாட்டை வெட்டியும் பார்ப்போம் . மசியாவிடில் உடைத்தும் வைப்போம்

5. எல்லாஆ மதக்காரனின் உயிரும் ஒரே ருசிதான் டோவ்!சொன்னது மரணம்.

6. செடியைச் சுற்றி வேலி போட்டேன்பா ! மறா நாளு செடியை மட்டும்
காணோம்.

7. உன்னோடதுக எல்லாம் எவ்வளவு அழகுடி! இந்த சிலுவையிலிருந்து
பார்க்கயில

8. தேவனே ! பயப்படாமல் பாவங்கள் செய் ! நான் இருக்கிறேன் உன்னை
இரட்சிக்க !

9. கவலை கவலை! பட்டுப் பார்த்தேன் ! கவலை கவலை !

10 மன்றாடிப் பார்த்தோம் கிடைக்கவில்லை ! கொன்றோடிப்போனோம்.

11. கவலைப்படாதே ! கட்டாயம் ஒரு காலம் வரும் . நீயும் நானும்
செத்துப்போக!

12. வாடா ! ஒரு கை பார்ப்போம் ! அவன் கைரேகை ஜோசியக்காரந்தான்.

13. சாதி ஒழிப்பு தீர்மானத்தை முன்மொழிவார் பழனிச்சாமி நாடார் ,எம்.எல்.

14. சிவப்பு நிறத்தில் சூரியன் , வெள்ளை நிறத்தில் நிலா ! அட நான் கவிஞன்
ஆயிட்டேன்டா!

15. என்ன அவன் இவ்ளோ அறிவுப்பூர்வமாக பேசுகிறான் ? பைத்தியமோ !

16. பொழுது போக கவிதை எழுத , கவிதை எழுத பொழுது போச்சுது!

17. பார்த்து நட ! வழியில் இடறுவதற்க்கு மனிதர்கள் இருக்கிறார்கள்.


டைரிகள் தொடரும்,,,,
டப்பா டான்ஸ் ஆடும் ,,,,,



..

Posted by வாய்ப்பாடி குமார் on 10/27/2009 04:56:00 PM 12 கருத்துரைகள்

இருள் விலகும் கதைகள்

இன்று எழுதி வரும் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைகளை மையப்படுத்தி விஜய் மகேந்திரன் தொகுத்துள்ள சிறுகதை தொகுப்பு இருள்விலகும் கதைகள். இதை தோழமை பதிப்பகம் வெளியீட்டுள்ளது.

நான் வாசித்து அறிந்தவரை இந்திய மொழிகளிலே தமிழில் தான் சிறுகதை அதன் உச்சபட்ச சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. பல்வேறு விதமான கதை சொல்லும் முறைகள், கதைமொழி, வடிவ சோதனைகள், பின்நவீனத்துவன எழுத்து முறை, தலித்திய, பெண்ணிய சிந்தனை சார்ந்த சிறுகதைகள் என்று தமிழ் சிறுகதைகள் உலகின் சிறந்த சிறுகதைகளுக்குச் சமமாக எழுதப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு பத்தாண்டிலும் சிறுகதையின் போக்கு திசைமாற்றம் கொள்கிறது. புதுமைபித்தனின் துவங்கி இன்று எழுதிக் கொண்டிருக்கும் இளம்படைப்பாளி வரை சிறுகதை அடைந்துள்ள மாற்றமும் வளர்ச்சியும் அபரிமிதமானது.

நல்ல சிறுகதைகள் இன்று அதிகம் எழுதப்படவில்லை. வெளியான போதும் கவனம் பெறுவதில்லை என்ற பொதுக்குற்றசாட்டை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டாயிரத்திற்கு பிறகு எழுதத்துவங்கிய இளம் எழுத்தாளர்களில் பலர் நல்ல சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு என தனித்துவமான கதை சொல்லும் முறையும் கதைக்களமும் இருக்கிறது. எனது ஒரே குறை அவர்கள் தொடர்ந்து எழுதுவதில்லை�என்பது மட்டுமே

விஜயமகேந்திரன் இலக்கிய வாசிப்பிலும் எழுத்திலும் தீவிரமாக இயங்கிவருபவர். அவர் வா.மு.கோமு, சுதேசமித்ரன், ஷாராஜ், கே.என்.செந்தில், ஹரன் பிரசன்னா, எஸ். செந்தில்குமார், பாலை நிலவன், லட்சுமி சரவணக்குமார், சிவக்குமார் முத்தய்யா, விஜய மகேந்திரன், புகழ், என். ஸ்ரீராம் ஆகியோரின் சிறுகதைகள் கொண்ட இந்த தொகுப்பை உருவாக்கியிருக்கிறார். சமகால சிறுகதைப் போக்கின் குறுக்குவெட்டு தோற்றத்தை இந்தக் கதைகளின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது என்பது இத்தொகுப்பின் விசேசம்

இந்தச் சிறுகதைத் தொகுப்பு ஒரு முன்மாதிரி மட்டுமே. இதற்கு வெளியில் நம்பிக்கை தரும் சிறுகதை எழுத்தாளர்களாக மனோஜ், பவா.செல்லதுரை, காலபைரவன், அசதா, தமிழ்மகன், திருச்செந்தாழை, சந்திரா, ஹசீன், திசேரா, உமா சக்தி, லதா.(சிங்கப்பூர்) பாலமுருகன் (மலேசியா), போன்றவர்களை குறிப்பிடலாம்.

இன்றைய சிறுகதையின் பலம் அதன் கதை சொல்லும் முறை. கதாபாத்திரங்களை உருவாக்கி அதன் பின்னே நிகழ்ச்சிகளைத் தொடரச் செய்யும் சம்பிரதாய கதைசொல்லல் இன்று புறந்தள்ளப்பட்டுவிட்டது. கதை சொல்லும் குரலும் அது சுட்டிகாட்டும் இடைவெட்டு நிகழ்ச்சிகளும். அந்த நிகழ்வின் வழி வெளிப்படும் மனநிலையின் தீவிரமும். மொழித்தளங்களுமே இன்று சிறுகதையின் முக்கிய அம்சங்கள்.�

இந்ததொகுப்பில் அப்படி மாறுபட்ட கதை சொல்லும் முறைகளும் கதைமொழியும் காணமுடிகிறது.

வா.மு.கோமுவின் நல்லதம்பியின் டைரி குறிப்புகள் கதை அதன் சொல்லும் முறையால் பகடியும், அக எள்ளல்களும் கொண்டதாக உள்ளது. வா.மு. கோமுவின் சிறுகதைகளை வாசித்திருக்கிறேன். அவரது எழுத்தின் பலம் அதன் பளிச்சிடும் நகைச்சுவை. அது அசலானது. பலநேரங்களில் வாசிப்பவனை வாய்விட்டுச் சிரிக்க வைக்ககூடியது. அடிநிலை மக்களின் வாழ்விலிருந்து எழும் அந்த பகடியை கோமு சிறப்பாக கையாளத் தெரிந்தவர். அவரது கதாபாத்திரங்கள் வாழ்வின் உன்னதங்களை விடவும் அன்றாடச் சிரமங்களையும், அதிலிருந்து உருவாகும் அபத்த நிலைகளையும் முன்வைப்பவர்கள். இக்கதையிலும் நல்லதம்பி என்ற மையக்குரல் வழியாக இடைவெட்டி செல்லும் அபத்தமும் வலியை மறைத்துக் கொண்ட பகடியும் அழகாக வெளிப்பட்டுள்ளது.

சுதேசமித்ரன் இரண்டு நாவல்கள் எழுதியிருக்கிறார். தொடர்ந்து இணையத்திலும் சிற்றிதழ்களிலும் எழுதி வரும் தீவிர படைப்பாளி. அவரது சிறுகதையின் துவக்கமே கதையின் மையதொனியை அழகாக வெளிப்படுத்துகிறது. பழனியை ஒரு மாபெரும் சவரக்கத்தி போல அவர் உருவகப்படுத்துவதும் அதன் ஊடாக வெளிப்படுத்தும் அங்கதமும் இந்த கதையின் தனிச்சிறப்பு. கதை இயங்கும் தளத்தை விவரிக்கும் கேலியும், பழனி ஒரு வணிக மையமாகிப்போன அபத்த சூழலும் கதையில் நுட்பமாக பதிவு செய்யபட்டுள்ளது.


தொடர்ந்து படிக்க எஸ் ராமகிருஷ்னணின் வலையுடன் இணைக.

நன்றி.


http://sramakrishnan.com/view.asp?id=312&PS=௧

...



Posted by வாய்ப்பாடி குமார் on 10/22/2009 10:26:00 AM 4 கருத்துரைகள்

வாலிபனின் காதலைப் பெற....

கழுத்தில் மைனர் செயின் ,விரலில் இதய வடிவில் மோதிரம்,ஜீன்ஸ் பேன்ட் , டிஷர்ட்,ஒரு ஸ்பிலன்டர் ப்ளஸ் ,சிவந்த நிறத்தில் கையில் அலைபேசியுடன் உலா வரும் வாலிபனின் காதலை அடைந்தே தீருவது என்று கங்கணம் கட்டி , தினக்குளியல் லிரில் உடனும் , மேட்சான சுடிதார் ,பேர் அண்ட் லவ்லி கிரீம் பூச்சின் மேல் மைசூர் சாண்டல், உதட்டுக்கு லிப்ஸ்டிக் , காதில் தினமும் டிசைன் டிசைன் ஜிமிக்கி , உடை நிறத்தினால தோள்பை சகிதம் பினவாண்டனுக்காக காத்திருந்து தவிக்கும் யுவதிகள் வாலிபனின் காதலைப்பெற
தவிர்க்கவேண்டியவை :

1. சூரிய உதய காலத்தில் தூங்கக்கூடாது.
2. கர்ப்பிணிக்கும் , உடல் ஊனமுற்றோர்க்கும் பேருந்தில் உடனடியாக இடம் தரவேண்டும்.
3.இரவில் வீட்டைப்பெருக்கி குப்பையை வெளியில் கொண்டுபோய்க்கொட்டக்கூடாது.
4.காலால் மற்றொரு காலைத்தேய்த்து அலம்பக்கூடாது.
5.இரவுத்தூக்கத்தில் குப்புறப்படுக்கக்கூடாது.
6. நெற்றியில் பொட்டில்லாமல் இருக்கக்கூடாது.
7. கடவுளைத்திட்டவோ,சபிக்கவோ,கோபித்துக்கொள்ளவோ கூடாது.
8.அம்மாவாசை நாளன்று வாசனைப்பொடியொ,லிரில் ,சன்சில்க் போட்டோ குளிக்கக்கூடாது.
9.வெள்ளீ தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளீக்க வேண்டும்.
10 . காரணமின்றீ தாய்,தந்தை,பாட்டியிடம் எரிந்து விழுந்து அவர்கள் வாயில்
விழக்கூடாது.
11.தன்னை விட அழகாய் இருக்கும் தோழிகளைப் பார்த்து பொறாமைப்படக்கூடாது
12. நானேதான் உலகில் அழகானவள் , அறீவானவள் , குதிரைக்குட்டி என்ற‌
கர்வம் வேண்டும்.
13. காரணமின்றீ யாரையும் அழவைக்கக்கூடாது.
14.பூசணீக்காய், தேங்காய், சட்டிபானையை உடைக்கக்கூடாது.
15. எருமைச்சாணியை முகத்தில் அப்பியது போல எப்பொழுதும் நின்றிருக்க கூடாது.
16. சம்பந்தா சம்பந்தமின்றீ சிரித்தபடி இருக்கவேண்டும்.
17. சூரியனை உதயத்திலும், அஸ்தமனத்திலும் பார்க்கக்கூடாது.
18. பகலில் பாலும் , இரவில் தயிரும் சாப்பிடக்கூடாது.
19.வீட்டில் அனைவரும் சாப்பிட்டு முடித்தவுடன் சாப்பிடவேண்டும்
20. வடக்கே தலை வைத்துப்படுக்கக்கூடாது.
21. அன்னத்தை கவளம் கவளமாக உண்ணக்கூடாது.
22. இரண்டு கைகளாலும் தலையை சொறியக்கூடாது. பொடுகு இருக்குமெனில்
பொடுகு ஷாம்பு போட்டுக்குளித்து பொடுகை அகற்றி விட வேண்டும்
23.மழை இல்லாவிடினும் குடை பிடிக்க வேண்டும்.
24. எச்சில் கையால் தலையத் தொடக்கூடாது.
25.இன்னொருத்தன் காதலைப்பார்த்து முகம் சுளிக்கக்கூடாது.
26.குளோரின் வாய்வின் முக்கிய மூலப்பொருள் தெரியக்கூடாது.
27.தபால் தந்தி முறை நம் நாட்டில் யாருடைய ஆட்சிக்காலத்தில் புகுத்தப்பட்டது என்று தெரியக்கூடாது.
28.கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க எந்த உலோகத்திலான மேலாடை போடவேண்டும் என்று தெரியக்கூடாது.
29.அந்திப்பொழுதில் சாப்பிடுவதும்,படுப்பதும் கூடாது.
30.இரவில் பேண்டிஸ் , ரா அணிந்து படுக்கக்கூடாது.
31.குத்தடி குத்தடி ஜெயலக்கா முழுவதுமாக பாடத்தெரிய வேண்டும்.


காதலைப் பெற்றபின்பு எப்படி நடக்க வேண்டுமென்பதைப்பற்றீ டீவாலிக்கு
பட்டாஸ் வெடித்துவிட்டு வந்து பேசிக்கொள்ளலாம் ப்ரண்ட்ஸ் !

சுனாபானா .....ஒண்ணுமில்ல போ போ போ போய்ட்டேயிரு.!

...*

Posted by வாய்ப்பாடி குமார் on 10/14/2009 04:19:00 PM 5 கருத்துரைகள்