காதல் இளவரசர்
என்று சொன்ன
மகளைப் பார்த்து
தாய் சொன்னாள்
“தள்ளியே நட”
**********************************
இப்படி ஒன்றும்
செய்யாமல்
சும்மா கிடப்பதற்கு
பேசாமல்
காவடியாவது தூக்கலாம்.
***********************************
ஊர் மாரியம்மா
கனவில் வந்து புலம்பினாள்
பூசாரிகிட்ட எடுத்துச் சொல்
நானொருத்தி இங்க
குத்துக்கல்லாட்ட
இருக்கச்சே
சபரிமலைக்கு ஏன் மாலை போட்டேன்னு!
***********************************
தேடி வந்தவன்
திரும்ப போய் விட்டானாம்.
தேடிப் போனவன்
திரும்பி வந்துவிட்டேன்.
************************************
இப்படி பரிகாசமாய்
சிரிப்பது உனக்கு
வேடிக்கையென்றால்
இப்படி பரிகாசமாய்
எழுதுவது
எனக்கு டபுள் வேடிக்கை!
************************************
விடியலின் அழைப்பு கோழியின்
கொக்கரக்கோவில்!
நடந்து போன கொலுசொலி
என் பார்வைக்குத் தப்பி!
ஒரு நிமிரலில்
சாணி வண்டின் பர்ர்ர்ரிடல்!
நிமிடத்தில் வாசலில்
மறைந்த வாலில்லா நாய்!
பல்பொடி காகிதம் காலி!
வேப்பை குச்சியில் காக்கை எச்சம்.
இன்று தீர்வதில்லை இப்பிரச்சனை.
வட்டலில் இட்லி சட்னியுடன்.
அடுத்ததாக அடுப்பில் தோசைக்கல்!
நாளையே பார்த்துக் கொள்வோம் பல்லை!
**********************************************