ஆப்கான் வாழ்வியல் முறைமைகளை
முதன் முதலாக இந்த புத்தகத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. ரஷ்ய இலக்கியங்களை சிறுவயதிலிருந்தே
படித்து அனுபவப்பட்டிருந்த எனக்கு, பின்னர் பலநிலங்கள்
சார்ந்த எழுத்தாளர்களின் புதினங்கள் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் வாயிலாக மட்டுமே வாசிக்க
முடிகிறது. அவ்வகையில்
பட்டவிரட்டி.
ஆப்கானிஸ்தானில் குடியரசின் வீழ்ச்சிக்குப் பிறகு சோவியத்தின் படையெடுப்பு நிகழ்கிறது! மக்கள் பாகிஸ்தானுக்கும்
அமெரிக்காவுக்கும் வெளியேறுகிறார்கள்! நாவலில் நான்கைந்து இடங்களில் துப்பாக்கியோடு வரும் தாலிபான்கள் வாசிப்பவர்களையே
மிரட்டுகிறார்கள்.
அமீர் என்கிற சிறுவன்
தன் தந்தையிடம் வேலை பார்க்கும் அலியின் மகன் ஹசனுடன் நட்புறவோடு பழகுகிறான். அவனுக்கு அமீர் துரோகமிழைத்து
விட்டதாக அவனாக மனதில் எண்ணி வடுவாய் சுமக்கிறான். அவனது மகன் சொஹ்ராபை கடைசியில் தன்னுடன் வளர்த்துவதாக நாவல் நிறைவடைகிறது. அமீரின் முழு வாழ்க்கையையும்
முழுதாக சொல்லும் நாவல் இது. ஒவ்வொரு மகனுக்கும் தந்தையானவர் எப்போதும் ஒரு நாயகன்
தான். நாவலில்
அமீரின் தந்தை புற்று நோயால் இறக்கும் நேரம் வரை அமீருக்கு அவர் ஒரு நாயகன் தான்.
‘நீ
ஒரு மனிதனைக் கொல்லும் போது, அவன் வாழ்க்கையைத் திருடுகிறாய்! ஒரு கணவனின் மீதான மனைவியின்
உரிமையைத் திருடுகிறாய். அவனது குழந்தைகளின் தந்தையைத் திருடுகிறாய். நீ ஒரு பொய்யைச் சொல்லும்
போது, ஒருவருடைய
உண்மையின் மீதான உரிமையைத் திருடுகிறாய். நீ ஏமாற்றும் போது நேர்மையாக இருப்பதைத் திருடுகிறாய்”
பின்குறிப்பு : ஐக்கிய நாடுகள் சபையின் 2002ம் ஆண்டிலிருந்து ஐந்து
மில்லியன் ஆப்கானியர்கள் மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். 2007ம் ஆண்டில் இப்படி தாயகம்
திரும்பியவர்களை நாவலாசிரியர் காலித் ஹுஸைனி
சந்திக்கிறார். ஒரு டாலருக்கும் குறைவான செலவில் வாழ்க்கையை ஓட்டும்
மக்கள். குளிர்காலம்
முழுதும் தரைக்கடில் உள்ள குழிகளில் வாழ்கிறவர்கள். கலங்கிய ஆற்ருநீரை குடிக்கும் மக்கள். சுகாதார வசதிகளோ, கல்வி வசதிகளோ. வேலை வாய்ப்புகளோ இல்லாதவர்கள். பின்பாக காலித் ஹுஸைனி
ஃபவுண்டேசன் தொடங்கப்படுகிறது.
khaledhosseinifoundation.org இவை பற்றி அறிந்து கொள்ள!
தமிழாக்கம் - எம்.யூசுப் ராஜா.
எதிர் வெளியீடு- விலை-250.
000