காடோடி மற்றும் செத்த போன்


காடோடி - நக்கீரன்

பன்முகத்தன்மை கொண்ட இவர் முதலாக சூழலியளார் என்றே அறியப்பட்டவர். காடோடி இவரின் முதல் நாவல் முயற்சி. கட்டுரையாளர்கள் நாவல் என்ற வடிவத்திற்குள் வருகையில் தொய்வு ஏற்படுவது இயல்பான ஒன்று தான். ஆனால் சொல்லக் கூடிய விசயம் தீவிரத் தன்மை கொண்டமையால் தொய்வுகள் வாசகனுக்கு தெரிவதில்லை.

நாவல் முழுக்க பலவித பறவையினங்கள், விலங்கினங்கள் பற்றியான தகவல் களஞ்சியமாக இருக்கிறது. அன்னா,பிலியவ், பார்க்,ஒமர்,ரலா போன்ற கதாபாத்திரங்கள் நாம் நாவலில் தான் பயணிக்கிறோம் என்ற நினைவை அடிக்கடி நமக்கு தந்து உதவிக் கொண்டிருக்கின்றன. அதுவும் பிலியவ் என்ற கதாபாத்திரம் நாவலின் மையமாக ஒரு அமானுஷ்ய சக்தியுடன் செயல்படுகிறது.

வனம் என்ற பிரமாண்டம் ஒன்றே நம்மை இந்த நாவலுக்குள் பயணிக்க வைக்க வல்லதாயிருக்கிறது. ஆனால் வனத்தின் அழிவைப்பற்றி இந்த நாவல் போன்று இதுவரை தமிழில் எந்த நாவலும் பேசவில்லை. ஒவ்வொரு மரம் வீழ்கையிலும் நம் இதயம் ஒருகணம் அந்தக் கட்டி வைக்கப்பட்டிருந்த கோழி கத்துவது போல துடித்தே நிற்கிறது. இந்த புத்தகத்தை முடிக்கும் தருவாயில்  எனக்கென நான் வளர்த்திக் கொண்டிருக்கும் முருங்கை, எலுமிச்சை என்ற சின்ன வகை மரங்களின் மீது ஒரு தனி பாசம் ஏற்பட்டத்தான் செய்தது. போக தாய்மரம் வெட்டப்பட்ட பிறகு கதை சொல்பவர் அதன் மடியில் தலை சாய்த்து அழுவது எனபது கண்ணீரை வரவழைத்த இடம்.

இந்தப் புத்தகத்தைப் பற்றி அதிகம் பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை. இயற்கையின் மீது காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய புத்தகம் என்ற போதிலும் அவர்களாலும் எந்த பிரயோசனமும் இந்த இயற்கைக்கு இல்லை என்பதே இதை வாசிக்கையில் நான் உணர்ந்து கொண்டது. கொஞ்சம் நிலபுலன் வைத்திருக்கும் காட்டாளன் யாரும் இந்தப் புத்தகத்தை வாசிக்கவும் போவதில்லை என்பது தமிழுக்கான சாபக்கேடு!

இந்தப் புத்தகம் நல்லாயிருக்கு என்று  வாசகர்களுக்கு சொல்வது  கூட என் அறிவீனத்தின் ஒரு பகுதி தான்.

காடோடி,  அடையாளம் வெளியீடு,  விலை 270.  பேச ; 04332 273444

000


Late Fee shall be leavied in the next bill @2% of the outstanding amount pending after payment due date. Minimum late fee is 10/-.

மாத கட்டணம் 180.00, பயன்பாட்டு கட்டணம் 43.00 தள்ளுபடி -1.00, சேவை வரி 27.00. மொத்தம் 249.00.

அம்மா : ஒரு மாசம் பேசவே இல்லடா! போனும் வாங்கி குடுத்துட்டே! இந்த போனு செத்தே கெடக்குது ஒரு மாசமா! வேலை செய்ய ஆளே இல்லியாம். பேசாம இதை கட்டாம ட்டுடலாமா?

அடியேன் : இது எப்பயும் நடக்குறது தானே! இப்ப என்ன புதுசா? 2000 ரூவா அட்வான்ஸ் குடுத்து வாங்குனது எப்பன்னு எனக்கு மறந்தே போச்சே! அப்புறம் இந்த கிராமத்துல ஒருத்தரு ஒரு இருவது ஊட்டுல பத்து ரூவா வசூல் செஞ்சு போய் கட்டீட்டு வந்துட்டு இருக்காரே! அவருக்கு சங்கடமா இருக்குமே!

அம்மா : என்ன பண்ணலாம்னு கேட்டா நாயம் பேசுறான்.

அடியேன் : இப்பயும் செத்து கெடக்குது. யாரும் கூப்பிடவும் முடியாது.. நீயும் பண்ண முடியாது.

அம்மா : அது எப்ப செத்துச்சுன்னே தெரியிலடா! சேவை வரி, மாச கட்டணம்னு போட்டு தாக்கியிருக்காங்க! இங்கென்ன காசு வெளையுதா? நீ போன் பில்லு கட்டுனீன்னா தெரியும் வருத்தம்.

அடியேன் : ஐய்யய்யோ! செத்த போனு செத்ததாவே இருக்கட்டும். பில்லு கட்டாதே உடு!


இப்படியாக ஒரு குடும்ப நண்பராக இருந்த ஒரு உயிரற்ற …..!!!!

000

கருத்துகள் இல்லை: