கதலிக்கிறேன்
கதலிக்கிறேன்
கதக்களியு
ஆடுறேன்னு
எம்
பொறத்தாண்டியே
ஊரு பூராம்
சுத்தி
சாவடிச்சுட்டு
போனவொ
புதுப்புருஷங்கிட்ட மொதொ
ராத்திரில
கேக்கா,
‘ஏனுங் இதுக்கு முன்ன நீங்கொ
யாரையாச்சி
கதலிச்சி சாவடிச்சிருக்கீங்களா?’
000
செருப்பு
அந்து போச்சுனு
அவத்திக்கே
உட்டுட்டு பஸ்
ஏறுறேன்..
அதை தூக்கி கிக்கத்துல
வெச்சுட்டு
போவுது லூசு!
இதுல
ரவ் லுக்கு வேற அதுக்கு!
மண்டையக்
கொண்டி எங்க முட்டிக்க?
000
ரமேசு உன்னிய
கூப்பிட்டேன்
சுவிச் ஆப்புங்காட்டி தான்
சுரேஷை கூப்பிட்டுக்கிட்டேன்!
சுவிச் ஆப்புங்காட்டி தான்
சுரேஷை கூப்பிட்டுக்கிட்டேன்!
000
என்னை
பொண்ணு பாக்க
இன்னிக்கி
வர்றாங்கடாங்கேன்..
மேல
சொல்லுங்கிறியா?
-உங்களிடம் கதைத்துக் கொண்டிருந்த
நபர்
காதில் புகை வந்ததால்..
தன்
அலைபேசியை உடைத்து விட்டார்!
000 யாராச்சிம் எதுனாச்சிம்
சொல்லுவாங்களோன்னு
சாமத்துல
காட்டுப்பக்கமா
அவுங்க
அலைபேசி விளக்கோட
லப்பரு
செருப்பத் தொட்டுட்டு
வந்துட்டு
போயிட்டு தா இருக்காங்க!
ஊருக்கே
விசயம் தெரியுமின்னு
பாவம்
அவிங்களுக்கு தெரியாது!
தெரிஞ்சா
உசுரை உட்டுருவாங்க அவுங்க!
மாகாளியாத்தா…
அப்பிடிக்கிப்பிடி
ஆயிடாம
அவுங்கள பக்க
துணையிருந்து
பாத்துக்கோ!
000
ரமேசு
உன்னிய கட்டினா
எட்டுப்
பிள்ளைகள்ன்னு
ஜோசியம்
சொல்லுது!
சுரேசை கட்டிக்கிறேன்!
மண்டபத்துல
வந்து ரவுசு உட்டீன்னா
மண்டையில
போடுவேன்!
000